sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தொகுதி மேம்பாட்டு நிதிக்கான ஜிஎஸ்டியை உடனே விடுவியுங்கள்: முதல்வருக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

/

தொகுதி மேம்பாட்டு நிதிக்கான ஜிஎஸ்டியை உடனே விடுவியுங்கள்: முதல்வருக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

தொகுதி மேம்பாட்டு நிதிக்கான ஜிஎஸ்டியை உடனே விடுவியுங்கள்: முதல்வருக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

தொகுதி மேம்பாட்டு நிதிக்கான ஜிஎஸ்டியை உடனே விடுவியுங்கள்: முதல்வருக்கு இபிஎஸ் வலியுறுத்தல்


ADDED : நவ 07, 2025 07:14 PM

Google News

ADDED : நவ 07, 2025 07:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தொகுதி மேம்பாட்டு நிதிக்கு உண்டான ஜிஎஸ்டி நிதியை உடனடியாக விடுவிக்கும்படி முதல்வர் ஸ்டாலினை, எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கை:

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு உண்டான ஜிஎஸ்டி வரியை அரசே செலுத்தும் என்று அரசாணை எண். 23, 15.9.2025 அன்று வெளியிடப்பட்ட பின்னும், இதுவரை ஜிஎஸ்டி வரிக்கான நிதியை தமிழக அரசு விடுவிக்க வில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்டு, முடிவுற்ற பணிகளுக்கு உண்டான நிதியை மாவட்ட ஆட்சியர்கள் விடுவிக்காமல் சிரமப்படுகின்றனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு உண்டான ஜிஎஸ்டி நிதியை கூட விடுவிப்பதற்கு ஏன் இவ்வளவு தாமதம்?

எனவே, தொகுதி மேம்பாட்டு நிதிக்கு உண்டான ஜிஎஸ்டி நிதியை உடனடியாக விடுவிக்கும் படி முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் அதில் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us