sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செங்கல்பட்டு நிலையத்தில் தடம் புரண்ட விரைவு ரயில்

/

செங்கல்பட்டு நிலையத்தில் தடம் புரண்ட விரைவு ரயில்

செங்கல்பட்டு நிலையத்தில் தடம் புரண்ட விரைவு ரயில்

செங்கல்பட்டு நிலையத்தில் தடம் புரண்ட விரைவு ரயில்


ADDED : ஜூலை 26, 2025 02:09 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 02:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு,:Lசென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த விரைவு ரயிலை செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் உள்ள, ஐந்தாவது நடைமேடையில் நிறுத்தி சுத்தம் செய்வது வழக்கம்.

நேற்று மாலை 5:00 மணியளவில், ரயிலை சுத்தம் செய்த பின், ஓட்டுநர் ரயிலை இயக்க முயன்ற போது, 'இன்ஜின் ஜெனரேட்டர்' பெட்டியின் சக்கரங்கள், தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன.

ரயிலின் முன்பக்கம் இருந்த,'சென்டிங் லாக்'கை எடுக்காமல் ரயிலை இயக்கியதால், தடம் புரண்டது தெரிய வந்தது. குறிப்பிட்ட ரயில் பெட்டியை மட்டும் விட்டு விட்டு, பொதிகை விரைவு ரயில், எழும்பூர் சென்றது. இதனால் இரவு 8:10 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய ரயில், இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.






      Dinamalar
      Follow us