கள்ளச்சாராய வழக்கில் கைதான 23 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
கள்ளச்சாராய வழக்கில் கைதான 23 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
ADDED : டிச 20, 2024 05:55 AM
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 23 பேரின் நீதிமன்ற காவல், வரும் ஜனவரி 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி ஆகிய பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் வாங்கி குடித்ததில் 68 பேர் இறந்தனர். இவ்வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி., போலீசார் 24 பேரை கைது செய்தனர். இதில் ஒருவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
கண்ணுகுட்டி (எ) கோவிந்தராஜ், இவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன், ஷாகுல்அமீது, ராமர், அய்யாசாமி, தெய்வீகன், வேலு உட்பட 23 பேரின் நீதிமன்ற காவல் நேற்று முடிவடைந்தது.
அதை தொடர்ந்து கடலுார் மத்திய சிறையில் உள்ள 23 பேரையும் காணொலி மூலம் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி ஸ்ரீராம் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தினர். 23 பேரின் நீதிமன்ற காவலை, வரும் ஜனவரி 2ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.