ADDED : மார் 08, 2024 12:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:இரு பல்கலைகளின் துணைவேந்தர்கள் பதவிக்காலம், ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தராக செல்வகுமார்; தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை துணைவேந்தராக சந்தோஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.
இவர்களின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், இருவருக்கும் அடுத்த மாதம், 9ம் தேதியில் இருந்து, மேலும் ஓராண்டுக்கு பதவி நீட்டிப்பு வழங்கி கவர்னர் ரவி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான ஆணை, நேற்று கவர்னர் மாளிகையில் கவர்னர் ரவி முன்னிலையில், அவர்களிடம் வழங்கப்பட்டது.

