sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழுக்கு அவமரியாதை இழைத்தேனா; பொய்யான குற்றச்சாட்டு கூறுகிறார் முதல்வர்: கவர்னர் ரவி

/

தமிழுக்கு அவமரியாதை இழைத்தேனா; பொய்யான குற்றச்சாட்டு கூறுகிறார் முதல்வர்: கவர்னர் ரவி

தமிழுக்கு அவமரியாதை இழைத்தேனா; பொய்யான குற்றச்சாட்டு கூறுகிறார் முதல்வர்: கவர்னர் ரவி

தமிழுக்கு அவமரியாதை இழைத்தேனா; பொய்யான குற்றச்சாட்டு கூறுகிறார் முதல்வர்: கவர்னர் ரவி

64


UPDATED : அக் 18, 2024 07:56 PM

ADDED : அக் 18, 2024 07:52 PM

Google News

UPDATED : அக் 18, 2024 07:56 PM ADDED : அக் 18, 2024 07:52 PM

64


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : ''தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதல்வர் அவர்கள் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்,'' என கவர்னர் ரவி கூறியுள்ளார்.

சென்னை டிடி தமிழ் அலுவலகத்தில் நடந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் 'திராவிடம் ' என்ற வார்த்தை கொண்ட வரி விடுபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவர்னர் ரவிக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் 'எக்ஸ் ' சமூக வலைளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இது தொடர்பாக 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் கவர்னர் ரவி வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: முதல்வர் ஸ்டாலின் இன்று மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும்.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவி தமிழ் மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தை தமிழகம் உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும், உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது என்பதையும் முதல்வர் நன்றாக அறிவார். பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழை கொண்டு சென்றார்.

ஒரு பெருமைமிகு இந்தியன் என்ற முறையில், நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன். அதில், சமீபத்திய நடவடிக்கையாக வட கிழக்கு மாநிலத்தில் தமிழை பரப்ப அசாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுஹாத்தி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரு கவர்னருக்கு எதிராக முதல்வர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது. முதல்வரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் உள்ளது.

தனது இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதல்வர் அவர்கள் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் ரவி கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us