sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பட்டுக்கூடு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

/

பட்டுக்கூடு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

பட்டுக்கூடு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

பட்டுக்கூடு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : செப் 21, 2024 10:56 PM

Google News

ADDED : செப் 21, 2024 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு, கவுந்தப்பாடி, கோபி, தாளவாடி, தாராபுரம், காங்கேயம் உட்பட பல பகுதியில், 10,000 ஏக்கருக்கு மேல் வெள்ளை பட்டுக்கூடு உற்பத்தியாகிறது.

ஜன., முதல் ஜூலை வரை முட்டைக்கூடு தொகுப்பில் வீரியமற்ற புழுக்கள் உருவாகி, வெயில் தாங்காமல், நுாலை உற்பத்தி செய்யாமல் இறந்துவிடுவதாக விவசாயிகள் கவலை அடைந்தனர். இரு மாதங்களாக வெயில் சற்று குறைந்து சீதோஷ்ண நிலை மாற்றத்தாலும், பட்டுப்புழு தரமான வளர்ச்சியாலும், 80 சதவீத அறுவடையை எட்டியதால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு பட்டு விவசாயிகள் சங்க தலைவர் ராஜகோபால் கூறியதாவது:

மே - ஜூன் மாதங்களில் ஒரு கிலோ பட்டுக்கூடு, 450 ரூபாய் முதல், 525 ரூபாய் விலையில் தர்மபுரியில் விற்பனையானது. இரு மாதங்களாக சீதோஷ்ண நிலை மாற்றத்தால், நோய் தாக்கமின்றி நன்கு வளர்ச்சி, 80 சதவீதம் வரை உற்பத்தியாகி உள்ளது.

இனி வரும் நாட்களிலும் மழைக்காலமாக இருக்கும் என்பதால், இதே நிலை தொடரும் என எதிர்பார்க்கிறோம். தர்மபுரியில், சில நாட்களாகவே ஒரு கிலோ பட்டுக்கூடு, 600 முதல், 700 ரூபாய் விலையில் விற்பனையாகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us