sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பட்டாசு தீப்பொறி பட்டு தீப்பெட்டி ஆலையில் தீ

/

பட்டாசு தீப்பொறி பட்டு தீப்பெட்டி ஆலையில் தீ

பட்டாசு தீப்பொறி பட்டு தீப்பெட்டி ஆலையில் தீ

பட்டாசு தீப்பொறி பட்டு தீப்பெட்டி ஆலையில் தீ


ADDED : நவ 02, 2024 02:43 AM

Google News

ADDED : நவ 02, 2024 02:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம், சிவகாசி காரனேசன் காலனியை சேர்ந்தவர் ஹரிராம் சுந்தரவேல், 50; இவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை விருதுநகர் அல்லம்பட்டி குல்லுார்சந்தை ரோடு பகுதியில் 'சுந்தரவேல் மேட்ச் இன்டஸ்ட்ரீஸ்' என்ற பெயரில் இயங்கி வருகிறது.

இந்த ஆலை அருகே தீபாவளியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு, 9:45 மணிக்கு சிறுவர்கள் பட்டாசு வெடித்தனர். பட்டாசு தீப்பொறி, ஆலை ஜன்னல் வழியாக மருந்து இல்லாத தீக்குச்சி உள்ள அறையில் பட்டதில் தீப்பிடித்தது.

விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். எனினும், அறையில் 400 மூட்டை தீக்குச்சி எரிந்து நாசமானது. தீக்குச்சிகளை தரம் பிரிக்கும் லெவலிங் இயந்திரமும் சேதமடைந்துள்ளது. விடுமுறை நாள் என்பதால் ஆலையில் ஆட்கள் இல்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us