sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நாட்டு படகுகளுக்கு மண்ணெண்ணெய் வழங்குவதில் அதிகாரிகள் பாரபட்சம் மீனவர்கள் குற்றச்சாட்டு

/

நாட்டு படகுகளுக்கு மண்ணெண்ணெய் வழங்குவதில் அதிகாரிகள் பாரபட்சம் மீனவர்கள் குற்றச்சாட்டு

நாட்டு படகுகளுக்கு மண்ணெண்ணெய் வழங்குவதில் அதிகாரிகள் பாரபட்சம் மீனவர்கள் குற்றச்சாட்டு

நாட்டு படகுகளுக்கு மண்ணெண்ணெய் வழங்குவதில் அதிகாரிகள் பாரபட்சம் மீனவர்கள் குற்றச்சாட்டு


ADDED : ஜூன் 01, 2025 05:37 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நாட்டு படகுகளுக்கு மண்ணெண்ணெய் வழங்குவதில், அதிகாரிகள் பாரபட்சமாக நடப்பதாக, மீனவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க தலைவர் அலெக்சாண்டர் கூறியதாவது:

கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய கடலோர மாவட்டங்களில், மண்ணெண்ணெயில் இயங்கும் நாட்டு படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக, கன்னியாகுமரியில் உள்ள, 6,000க்கும் மேற்பட்ட படகுகளில், 4,500க்கும் மேற்பட்டவை, மண்ணெண்ணெயில் இயங்கக்கூடிய இன்ஜின்கள் பொருத்தப்பட்டவை.

மானிய திட்டத்தில், இந்த படகு ஒன்றுக்கு, லிட்டர் 25 ரூபாய் என, மாதந்தோறும் 300 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.

நாட்டு படகுகளில் உள்ள இன்ஜின்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், அதை காரணமாக வைத்து, மண்ணெண்ணெய் வழங்குவதை அதிகாரிகள் நிறுத்தி விடுகின்றனர். தற்போது, 300க்கும் மேற்பட்ட படகுகளுக்கு மண்ணெண்ணெய் நிறுத்தம் செய்துள்ளனர்.

அதேபோல, மண்ணெண்ணெய் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. சரியான நேரத்தில் வழங்குவதில்லை. இதுகுறித்து கேட்கும்போது, 'ஸ்டாக்' இல்லை என, மீன்வளத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளிகள், இந்த மானிய விலை மண்ணெண்ணெய் கேட்டு விண்ணப்பிக்கக் கூடாது என, கடந்த ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதை காரணம் காட்டி, ஏற்கனவே உள்ள பயனாளிகள் பலரை பட்டியலில் இருந்து நீக்கி விட்டனர்.

இதுதொடர்பாக, அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, விரைவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us