sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னையில் மலர் கண்காட்சி: அமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு

/

சென்னையில் மலர் கண்காட்சி: அமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு

சென்னையில் மலர் கண்காட்சி: அமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு

சென்னையில் மலர் கண்காட்சி: அமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு


ADDED : ஜன 02, 2025 07:21 AM

Google News

ADDED : ஜன 02, 2025 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில்; சென்னையில் இன்று துவங்கும் மலர் கண்காட்சியில், 50க்கும் மேற்பட்ட பல வகை மலர்கள் காட்சிப்படுத்தப்படுகிறது என, அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:

தமிழக வேளாண் உழவர் நலத் துறை சார்பில், சென்னை செம்மொழி பூங்காவில் நான்காவது 'சென்னை மலர் கண்காட்சி-2025' இன்று (2ம் தேதி) துவங்கி இரண்டு வாரங்களுக்கு நடக்கிறது. மலர் கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட மலர் வகைகள் பயன்படுத்தி 15 லட்சம் மலர் தொட்டிகள் காட்சிப்படுத்தப்படுகிறது. 20க்கும் மேற்பட்ட வடிவங்களில் மலர் காட்சிகள் அமைக்கப்படுகிறது.

கண்காட்சிக்கான நுழைவுச் சீட்டு https://tnhorticulture.in/spetickets/ என்ற இணைய தளம் மூலமாகவும், மலர் கண்காட்சி நடக்கும் செம்மொழி பூங்காவில் நேரடியாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

மலர் கண்காட்சியில், விவசாயிகள் பயன் பெறும் வகையில் பல்வேறு வேளாண்மைத் திட்டங்கள் இடம்பெறுகிறது. கடலுார் மாவட்ட விவசாயிகள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us