ADDED : அக் 29, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து, நுகர்பொருள் வாணிப கழகம், நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.
நடப்பு நெல் கொள்முதல் சீசன், கடந்த செப்., 1ல் துவங்கியது. நெல் அறுவடை அதிகம் உள்ள இடங்களில், விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதற்காக, 1,020 நேரடி கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் வரை, 4.02 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, 56,283 நபருக்கு, 927 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.