ADDED : ஜூன் 19, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா, தனது சகோதரியிடம் 17 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில், நேற்று முன்தினம் சென்னையில் அவர் கைது செய்யப்பட்டார்.
அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அ.தி.மு.க.,வின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாகவும், கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் வகையிலும், துாத்துக்குடி தெற்கு பகுதி செயலர் ராஜா செயல்பட்டு உள்ளார்.
'அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்,' என தெரிவித்து உள்ளார்.