sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஐ.டி., ஊழியரிடம் ஆன்லைன் வர்த்தக ஆசை காட்டி ரூ.49 லட்சம் மோசடி

/

ஐ.டி., ஊழியரிடம் ஆன்லைன் வர்த்தக ஆசை காட்டி ரூ.49 லட்சம் மோசடி

ஐ.டி., ஊழியரிடம் ஆன்லைன் வர்த்தக ஆசை காட்டி ரூ.49 லட்சம் மோசடி

ஐ.டி., ஊழியரிடம் ஆன்லைன் வர்த்தக ஆசை காட்டி ரூ.49 லட்சம் மோசடி

1


ADDED : டிச 01, 2024 07:43 AM

Google News

ADDED : டிச 01, 2024 07:43 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்த ஐ.டி., ஊழியரிடம் ஆன்லைன் வர்த்தக ஆசை காட்டி, 49 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

கம்பத்தை சேர்ந்த ஐ.டி., ஊழியர் சபரி, 45. இவர், ஆன்லைனில் வர்த்தகம் தொடர்பாக சிலரை தொடர்பு கொண்டார். அவர்கள், சில 'லிங்க்'களை அனுப்பி, வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்ப கூறினர்.

அதன்படி,சபரி, 49 லட்சம் ரூபாய் அனுப்பினார். பணம் திரும்ப கிடைக்கவில்லை. தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் ஒரு வங்கி கணக்கு மதுரையை சேர்ந்த விக்னேஷ் என்பவருடையது என தெரியவந்தது.

அவரிடம் இருந்து வங்கி கணக்கு, மொபைல் போன் சிம்கார்டுகளை மதுரையை சேர்ந்த ராஜா, மனைவி வீரலட்சுமி வாங்கியது தெரிந்தது. மூவரையும் இரு மாதங்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர்.

சபரி அனுப்பிய பணம் 10.97 லட்சம் ரூபாயை திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் உள்ள தனியார் வங்கி கணக்கிற்கு சென்றதும் தெரிந்தது. அந்த வங்கி கணக்கு, புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் சொரியம்பட்டி ஆறுமுகம், 42, என்பவர் பெயரில் இருந்தது.

அவர் இரும்பு கடை நடத்தியதும், பணத்திற்காக தன் வங்கி கணக்கு, அதனுடன் தொடர்புடைய சிம்கார்டை, ராமநாதபுரம் மாவட்டம் துணையத்துாரை சேர்ந்த மாதவன், 36, என்பவருக்கு விற்பனை செய்தது தெரிந்தது.

மாதவன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நிறுவனம் நடத்தினார். வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் ஆறுமுகம், மாதவன் ஆகியோரை இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

போலீசார் கூறுகையில், 'பொருளாதாரத்தில் நலிந்து, படிப்பறிவு குறைந்தவர்களின் வங்கி கணக்குகள், அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் எண், ஏ.டி.எம்., கார்டுகளை சிலர் பணம் கொடுத்து வாங்குகின்றனர். அதை, சைபர் கொள்ளை கும்பலுக்கு கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்வது கண்டறியப்பட்டுள்ளது.

'முடக்கப்பட்ட ஆறுமுகத்தின் வங்கி கணக்கில் சில நாட்களில், 3.5 கோடி ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. கைதானவர்களிடமிருந்து, 1.80 லட்சம் ரூபாய், மூன்று வங்கி பாஸ் புத்தகம், ஏ.டி.எம்., கார்டுகள், இரு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என்றனர்.






      Dinamalar
      Follow us