ADDED : செப் 04, 2025 02:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் நேற்று ஆபரண தங்கம் சவரன் விலை, 78,000 ரூபாயை தாண்டி, 78,440 ரூபாய்க்கு விற்கப் பட்டது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 9,725 ரூபாய்க்கும், சவரன் 77,800 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
வெள்ளி கிராம், 137 ரூபாய்க்கு விற்பனையானது .
நேற்று தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து, 9,805 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில் 78,000 ரூபாயை தாண்டி, 78,440 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு 415 ரூபாய், சவரனுக்கு 3,320 ரூபாய் அதிகரித்து உள்ளது.