ADDED : செப் 13, 2025 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:உலகின் பல நாடுகள், தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்வது உள்ளிட்ட காரணங்களால், நம் நாட்டில் தங்கம் விலை உச்சத்தை எட்டியுள்ளது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 10,150 ரூபாய்க்கும், சவரன், 81,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 140 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 90 ரூபாய் உயர்ந்து, 10,240 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 720 ரூபாய் அதிகரித்து, 81,920 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வெள்ளி கிராமுக்கு, 2 ரூபாய் உயர்ந்து, 142 ரூபாய்க்கு விற்பனையானது.

