ADDED : டிச 18, 2025 03:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 12,350 ரூபாய்க்கும், சவரன் 98,800 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 211 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து, 12,400 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 99,200 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு 11 ரூபாய் உயர்ந்து, 222 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும், கிலோவுக்கு 11,000 ரூபாய் உயர்ந்து, 2.22 லட்சம் ரூபாயாக அதிகரித்து உள்ளது.
தங்கத்தைப் போல் வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது. இதற்கு, தொழிற்சாலைகளுக்கான வெள்ளி பயன்பாடு அதிகரித்து வருவதுடன், அதன் மீதான முதலீடுகளும் குவிந்து வருவதே காரணம் என, நகை விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

