sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கமலையும் தமிழையும் அவமதிக்கிறது அரசு: சீமான்

/

கமலையும் தமிழையும் அவமதிக்கிறது அரசு: சீமான்

கமலையும் தமிழையும் அவமதிக்கிறது அரசு: சீமான்

கமலையும் தமிழையும் அவமதிக்கிறது அரசு: சீமான்

5


ADDED : மே 30, 2025 05:27 AM

Google News

ADDED : மே 30, 2025 05:27 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: 'தமிழிலிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்' என்ற வரலாற்றை கூறியதற்காக, நடிகர் கமலை, ஒரு சில கன்னட அமைப்புகள், கர்நாடகாவில் கமலை நுழைய விட மாட்டோம்; அவரது படங்களை திரையிட விட மாட்டோம் எனக்கூறி, அடிபணிய வைக்க நினைப்பது கண்டனத்துக்குரியது.

தமிழ்மொழி தோன்றி வளர்ந்த, பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின், அதிலிருந்து கிளைத்த மொழி கன்னடம் என்ற வரலாற்று உண்மையை ஏற்க மனமில்லாத கன்னட வெறியர்கள் தான் வன்முறை மிரட்டல்களை விடுக்கின்றனர்.

இதையடுத்து, கமலின், தக் லைப் படத்தை, கர்நாடகாவில் திரையிட மறுத்தால், அம்மாநில படங்களை, தமிழகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என எச்சரித்து, போராட்டத்தை முன்னெடுத்தால், அது முறையாக இருக்குமா? ஏன், ஆக்கப்பூர்வமான செயலாக இருக்குமா?

இங்கே தமிழர்கள் கோபம் அடைந்தால், ஒரு கன்னட படம் கூட திரையிட முடியாத சூழலை ஏற்படுத்த முடியும். தமிழக முதல்வரை அவமரியாதையாக நடத்தியபோது, மாநில அரசு மவுனமாக இருந்தது.

தற்போது கமலை அவமதிக்கும்போதும், வாய் திறக்காமல் அமைதியாக உள்ளது. இதன் வாயிலாக, கமலை மட்டும் அல்ல; தமிழ் மொழியையும் அரசு சேர்த்தே அவமதிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us