sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மழை ஏற்படுத்திய மாற்றத்தால் பசுமையான தேயிலை தோட்டங்கள்

/

மழை ஏற்படுத்திய மாற்றத்தால் பசுமையான தேயிலை தோட்டங்கள்

மழை ஏற்படுத்திய மாற்றத்தால் பசுமையான தேயிலை தோட்டங்கள்

மழை ஏற்படுத்திய மாற்றத்தால் பசுமையான தேயிலை தோட்டங்கள்


ADDED : ஜன 16, 2024 01:17 AM

Google News

ADDED : ஜன 16, 2024 01:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : மூணாறில் பனிபொழிவால் பசுமையை இழக்கும் நேரத்தில் மழை ஏற்படுத்திய மாற்றத்தால் தேயிலை தோட்டங்கள் பசுமையுடன் காட்சியளிக்கின்றன.

மூணாறில் ஆண்டு தோறும் நவம்பரில் குளிர் காலம் துவங்கி பிப்ரவரி இறுதி வரை நீடிக்கும். அப்போது டிச., இறுதி மற்றும் ஜன., முதல் இரண்டு வாரத்திற்குள் வெப்பம் மைனஸ் டிகிரி செல்சியஸ் குறைந்து உறைபனி ஏற்படும். அதனால் தேயிலை செடிகள், புல்மேடுகள், செடி, கொடிகள் என அனைத்தும் கருகி பசுமையை இழந்து விடும்.

கடந்தாண்டு டிச.,30 முதல் ஜன.,9 முதல் தொடர்ந்து பத்து நாட்கள் உறைபனி ஏற்பட்டது. இந்தாண்டு தற்போது வரை மழை பெய்வதால் உறைபனிக்கு வாய்ப்பு இன்றி போனது.

நேற்று முன்தினம் காலை குறைந்தபட்ச வெப்பம் 13 டிகிரியாக இருந்த நிலையில் நேற்று காலை 6 டிகிரி செல்சியஸ் ஆக குறைந்தது. இருப்பினும் பகலில் மழை மேகம் சூழ்ந்ததால் வரும் நாட்களிலும் குளிர் குறைய வாய்ப்பில்லை.

தற்போது பெய்யும் மழை தேயிலை சாகுபடிக்கு மிகவும் ஏற்றதாக அமைந்தது. அதனால் பனிபொழிவால் பசுமையை இழக்கும் நேரத்தில் மழை ஏற்படுத்திய மாற்றத்தால் தேயிலைத் தோட்டங்கள்பசுமையுடன் காட்சியளிக்கின்றன.






      Dinamalar
      Follow us