sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளீர்களா?: மா.கம்யூ., பாலகிருஷ்ணன் கேள்வி

/

தமிழகத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளீர்களா?: மா.கம்யூ., பாலகிருஷ்ணன் கேள்வி

தமிழகத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளீர்களா?: மா.கம்யூ., பாலகிருஷ்ணன் கேள்வி

தமிழகத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளீர்களா?: மா.கம்யூ., பாலகிருஷ்ணன் கேள்வி

12


ADDED : ஜன 04, 2025 06:54 AM

Google News

ADDED : ஜன 04, 2025 06:54 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; தமிழகத்தில் அடக்குமுறை தொடர்வதால், அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளீர்களா என்று, மா.கம்யூ., பாலகிருஷ்ணன் முதல்வருக்கு கேள்வி எழுப்பினார்.

விழுப்புரத்தில் நேற்று இரவு நடந்த மா.கம்யூ., முதல் நாள் மாநில மாநாட்டில், அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நடக்கும்போது தட்டி கேட்கும் உரிமை எல்லோருக்கும் உள்ளது. பா.ஜ., அண்ணாமலை, பொள்ளாச்சி சம்பவம் பற்றி ஏன் பேசவில்லை. அரசியல் தான் அவர்களுக்கு முக்கியம். தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கான முயற்சியை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

தமிழகத்தில் தி.மு.க., பார்த்து நாங்கள் கேட்பது, ஆட்சியில் உள்ளபோது மக்களுக்காக செயல்படுத்த வேண்டிய திட்டங்களை தடையின்றி செயல்படுத்த வேண்டும். ஆனால், கிராமத்தில் பட்டா கேட்டு சிறு இயக்கம் நடத்தினாலும், தெருமுனை கூட்டம் என்றாலும், போலீஸ் தடை போட்டு வழக்கு போடுகிறது. ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்றால் வழக்கு போடுகிறது.

முதல்வரை கேட்கிறேன். தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளீர்களா? ஏன், போலீஸ் துறை கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது. மா.கம்யூ., மாநில மாநாட்டு பேரணிக்கு அனுமதி கேட்டோம், மறுத்துவிட்டீர்கள், செங்கோடி பேரணிக்கும் தடை விதித்தீர்கள். ஏன் உங்களுக்கு அச்சம்.

எங்களுக்கு மட்டுமல்ல, எதிர்கட்சி, பல அமைப்புகள் நடத்தும் போராட்டத்துக்கும் அனுமதிக்க வேண்டும். ஏன் தடுக்கிறீர்கள், சீப்பை ஒளித்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடுமா.

தமிழகத்துக்கு மாற்று மாடல், திராவிட மாடலோ, இந்துத்வா மாடலோ அல்ல, கம்யூ., மாடல் தான் சிறந்தது. கூட்டணி ஆட்சியில் நாங்கள் இல்லை. நிறைவேற்றாத திட்டங்களுக்கும் தி.மு.க., அரசு தான் பொறுப்பு. தமிழகத்தில் பட்டியிலின அடக்குமுறை அதிகமாக உள்ளது. நாளைக்கு தி.மு.க., எங்களை விமர்சிக்கலாம், அதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றார்.






      Dinamalar
      Follow us