sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மூளையை தின்னும் அமீபா சுகாதாரத்துறை எச்சரிக்கை

/

மூளையை தின்னும் அமீபா சுகாதாரத்துறை எச்சரிக்கை

மூளையை தின்னும் அமீபா சுகாதாரத்துறை எச்சரிக்கை

மூளையை தின்னும் அமீபா சுகாதாரத்துறை எச்சரிக்கை


ADDED : செப் 02, 2025 05:08 AM

Google News

ADDED : செப் 02, 2025 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'நீர்நிலைகளுக்கு, பொதுமக்கள் செல்வதை கட்டுப்படுத்த, உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில், மூளையை தின்னும் அமீபா தொற்றால், இரண்டு மாதங்களில் நான்கு பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் இந்த தொற்று பரவாமல் இருக்க, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

l பொது மக்கள் குறிப்பாக குழந்தைகள், தேங்கி நிற்கும் நீர், மாசடைந்த நீரை, குளிக்க பயன்படுத்த வேண்டாம். இதுகுறித்து உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொது மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்

l குளங்கள், ஏரிகள் போன்ற நீர்நிலைகளை சுற்றி, சுகாதார சூழலை உறுதி செய்ய வேண்டும்

l நீச்சல் குளங்களில், சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான நீச்சல் குளங்களில், குளோரின் பயன்பாட்டை, சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்

l நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் செல்வதை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

l அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், மூளையை தின்னும் அமீபா தொற்றின் அறிகுறிகளுடன் நோயாளிகள் வந்தால், அவர்களை உரிய மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us