ADDED : நவ 11, 2025 03:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகம் முழுதும் உஷார் நிலை
டில்லியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின், மத்திய உள்துறை அமைச்சகம், தமிழகம் உட்பட எல்லா மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உத்தரவிட்டு உள்ளது.
இதையடுத்து, தமிழகம் முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மற்றும் பஸ், ரயில் நிலையங்களில் சோதனைக்கு பின், பயணியர் அனுமதிக்கப்படுகின்றனர். மாநிலம் முழுதும் தீவிர வாகன சோதனையும் நடத்தப்படுகிறது.
சென்னையில் உள்ள, 12 காவல் மாவட்டங்களிலும், துணை கமிஷனர்கள் தலைமையில், இரவு முழுதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சந்தேக நபர்கள், எப்.ஆர்.எஸ்., எனும் முக அடையாள செயலி வாயிலாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும் நேற்று சோதனை நடத்தப்பட்டது.

