திருச்செந்துார் கோயில் அபிேஷகம் இடமாற்றத்திற்கு எதிராக வழக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
திருச்செந்துார் கோயில் அபிேஷகம் இடமாற்றத்திற்கு எதிராக வழக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
ADDED : பிப் 21, 2024 06:27 AM
மதுரை: திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயில் பச்சை சாத்தி அபி ேஷகம் இடமாற்றத்திற்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி ரவி தாக்கல் செய்த பொதுநல மனு:திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசி திருவிழாவையொட்டி பச்சை சாத்தி அபி ே ஷகம் இன்று (பிப்.,21) நடக்கிறது. சண்முகர் சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி அலங்காரங்களில் எழுந்தருளி அருள்பாலிப்பார். இது பிரம்மா, விஷ்ணு, சிவன் அம்சங்களில் முருகனே அருள்பாலிக்கிறார் என்பதை தெரிவிப்பதாகும். இது ஆண்டுதோறும் சிவன் கோயில் கலா மண்டபத்திற்கு கீழ்புறம் சண்முகர் பீடத்தில் நடைபெறும்.
இம்முறை அபி ேஷகத்தை சிவன் கோயில் வெளிப்பிரகாரம் தகரக் கொட்டகையில் வைத்து நடத்த உள்ளனர். இது ஆகமத்திற்கு எதிரானது. ஏற்கனவே நடந்த இடத்தில் அபி ேஷகம் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.
கோயில் தரப்பு: பக்தர்கள் அதிகம்பேர் பங்கேற்கும் வகையில் குடவரையில் தீபாராதனை நடக்கும் இடத்தில் அபி ேஷகம் நடைபெறும்.
இதற்கு கட்டளைதாரர்கள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இவ்வாறு தெரிவித்தது. நீதிபதிகள் நாளைக்கு (பிப்.,22) ஒத்திவைத்தனர்.

