sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மூன்றாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு நீதிமன்ற பெண் ஊழியருக்கு ஐகோர்ட் அனுமதி

/

மூன்றாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு நீதிமன்ற பெண் ஊழியருக்கு ஐகோர்ட் அனுமதி

மூன்றாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு நீதிமன்ற பெண் ஊழியருக்கு ஐகோர்ட் அனுமதி

மூன்றாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு நீதிமன்ற பெண் ஊழியருக்கு ஐகோர்ட் அனுமதி


ADDED : செப் 06, 2025 12:40 AM

Google News

ADDED : செப் 06, 2025 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'நீதிமன்ற பெண் ஊழியரின் மூன்றாவது பிரசவத்துக்கு, மகப்பேறு விடுப்பு வழங்க மறுத்தது நியாயமற்றது' என, தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், உளுந்துார்பேட் டை முன்சீப் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை ரத்து செய்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில், கடந்த ஏப்., 1 முதல், இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருபவர் ரஞ்சிதா.

விண்ணப்பம் இவருக்கு, எட்டு வயதில் ஒரு மகனும், ஆறு வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், ரஞ்சிதா மூன்றாவதாக கருவுற்றார். குழந்தை பிறப்புக்கான உத்தேச தேதியாக, செப்., 11 என, டாக்டர்கள் தெரிவித்துஇருந்தனர்.

மூன்றாவது பிரசவத்துக்கு, கடந்த மாதம் ஆகஸ்ட், 18 முதல் அடுத்தாண்டு ஆக., 17ம் தேதி வரையிலான ஓராண்டுக்கு மகப்பேறு விடுப்பும், சலுகைகளும் வழங்கக்கோரி, கடந்த ஆக., 14ம் தேதி, முன்சீப் நீதிமன்ற நீதி பதிக்கு விண்ணப்பித்தார்.

அந்த விண்ணப்பத்தை நிராகரித்து, ஆக., 19ல், முன்சீப் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரஞ்சிதா வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஹேமந்த் சந்தன் கவுடர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

நியாயமற்றது மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் எம்.தினேஷ், உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தரப்பில் வழக்கறிஞர் பி.பூங்குழலி ஆகியோர் ஆஜராகினர்.

இரு தரப்பு வாதங் களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனு தாரர், பணிக்கு சேரும் முன்பே இரண்டு குழந்தைகளை பெற்றுள்ளார். மூன்றாவது முறையாக கருவுற்ற நிலையில், பணிக்கு சேர்ந்த பெண்ணுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கலாம் என, உமாதே வி என்பவர் தொடர்ந்த வ ழக்கில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மனுதாரருக்கு உளுந்துார்பேட்டை முன்சீப் நீதிமன்ற நீதிபதி, சட்டப்படி மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். குழந்தை பிறப்புக்கு முன்பும், பின்பும் வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு ஆதரவாகவே, மகப்பேறு விடுப்பு வழங்க கொள்கை முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அது முதல் அல்லது இரண்டாவது பிரசவத்துக்கு மட்டுமே என்று தெரிவிக்கப்படவில்லை.

அவ்வாறு இருக்கும் போது, 3வது பிரசவத்துக்கு விடுப்பு மறுப்பது நியாயமற்றது. மேலும், 3வது பிரசவத்துக்கு விடுப்பு பெற உரிமை இல்லை எனக்கூற முடியாது.

மகப்பேறு விடுப்பு வழங்க மறுக்கவும் முடியாது என்பதால், மகப்பேறு விடுப்பு மற்றும் சலுகை கோரிய ரஞ்சிதா விண்ணப்பத்தை நிராகரித்த முன்சீப் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us