sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஸ்ரீரங்கத்தில் நடமாடும் கழிப்பறை அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

/

ஸ்ரீரங்கத்தில் நடமாடும் கழிப்பறை அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

ஸ்ரீரங்கத்தில் நடமாடும் கழிப்பறை அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

ஸ்ரீரங்கத்தில் நடமாடும் கழிப்பறை அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு


ADDED : டிச 21, 2024 10:51 PM

Google News

ADDED : டிச 21, 2024 10:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:ஸ்ரீரங்கம் நகர நலச்சங்க தலைவர் சுரேஷ் வெங்கடாசலம் ஏற்கனவே தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'ஸ்ரீரங்கத்தில் வடக்கு உத்திர வீதியில், ராமானுஜ ஜீயர் மடத்திற்கு எதிரே புதிதாக பொதுக் கழிப்பறைகள் அமைக்க, திருச்சி மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

'இதனால், சுகாதாரக்கேடு ஏற்படும்; சாலையின் அகலம் குறுகி விடும். போக்குவரத்து, திருவிழா, தேரோட்டத்திற்கு இடையூறு ஏற்படும். கோவிலுக்கு சொந்தமான மாற்று இடத்தில் கழிப்பறை அமைக்கலாம்' என்று குறிப்பிட்டார். அந்த மனுவை கடந்த செப்., 19ல் விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, 'ஸ்ரீரங்கத்தில் ரோடு, நடைபாதைகளில் கழிப்பறை உள்ளிட்ட எவ்வித கட்டுமானமும் மேற்கொள்ள தடை விதிக்கப்படுகிறது' என்று உத்தரவிட்டது.

திருச்சி மாநகராட்சி கமிஷனர், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் இணை கமிஷனர், 'திருவிழா காலங்களில் பக்தர்களின் வசதிக்காக ஸ்ரீரங்கம் வடக்கு, கிழக்கு உத்திர வீதிகளில் தற்காலிக கழிப்பறை அமைக்க அனுமதிக்க வேண்டும். செப்., 19ல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்றிய அமைக்க வேண்டும்' என்று மனு செய்தனர்.

அந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி எல்.விக்டோரியா கவுரி அமர்வு, 'வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி டிச., 30 முதல் ஜன., 18 வரை நடமாடும் கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டும். அவற்றை தினமும் இருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.

'ஜனவரி 19ல், அக்கழிப்பறைகளை அகற்ற வேண்டும். இந்த நடைமுறையை சித்திரை திருவிழாவின் போதும் பின்பற்ற வேண்டும்' என்று உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us