தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

 கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

 கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

4


ADDED : ஆக 09, 2026 02:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2026 02:18 AM

4


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே, அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

த.வெ.க., அரசின் தேர்தல் வாக்குறுதியின்படி, கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; மாத ஊதியத்தை, 50,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்; மே மாதம் உட்பட 12 மாதங்களும் ஊதியம் வழங்க வேண்டும் உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் நலச்சங்க பொதுச்செயலர் அருணகிரி கூறியதாவது:

த.வெ.க., அரசு, தேர்தல் வாக்குறுதியின்படி, கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் என்று நம்புகிறோம். வரும் மானிய கோரிக்கையில் இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லையேல், அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us