sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கந்தசஷ்டி லட்சார்ச்சனை கோலாகல துவக்கம்

/

கந்தசஷ்டி லட்சார்ச்சனை கோலாகல துவக்கம்

கந்தசஷ்டி லட்சார்ச்சனை கோலாகல துவக்கம்

கந்தசஷ்டி லட்சார்ச்சனை கோலாகல துவக்கம்

2


UPDATED : நவ 03, 2024 02:48 AM

ADDED : நவ 03, 2024 01:49 AM

Google News

UPDATED : நவ 03, 2024 02:48 AM ADDED : நவ 03, 2024 01:49 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழனிக்கு நிகராக சென்னை மாநகரில், வடபழனி ஆண்டவர் கோவில் விளங்குகிறது. ஆண்டுதோறும் மகா கந்தசஷ்டி விழா, இங்கு விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்தாண்டு விழா, வரசித்தி விநாயகரின் மூஷிக வாகனப் புறப்பாட்டுடன் நேற்று முன்தினம் துவங்கியது.

விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை 7:00 மணிக்கு லட்சார்ச்சனை துவங்குகிறது. இரவு சந்திரபிரபையில் பாலசுப்பிரமணியர் அருள்பாலிக்கிறார்.

விழாவின் பிரதான நாளான 7ம் தேதி காலை 6:00 மணிக்கு, மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை துவங்கி, உச்சி காலத்துடன் பூர்த்தியாகிறது. அதைச்தொடர்ந்து, தீர்த்தவாரி, கலசாபிஷேகம் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு, சூரசம்ஹார உற்சவம் நடக்கிறது. பின், தெய்வானை சமேத சண்முகப் பெருமான் மயில் வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது.

வரும் 8ம் தேதி இரவு 7:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் திருக்கல்யாணம்; மயில் வாகன புறப்பாடு நடக்கிறது. திருக்கல்யாண விருந்து இரவு 8:00 மணிக்கு நடக்கிறது. நவ., 12ம் தேதி வரை இரவு சுவாமி புறப்பாடு நடக்கிறது.

குன்றத்துார் கோவில்

குன்றத்துார் மலை குன்று மீது சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு கந்தசஷ்டி லட்சார்ச்சனை விழா நேற்று துவங்கியது. மூலவர், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து மாலை கந்தபுராண பாராயணம் நடந்தது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், 7ம் தேதி நடைபெறுகிறது.

கந்தகோட்டம்

பாரிமுனையில் கந்தகோட்டம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் என அழைக்கப்படும் முத்துக்குமார சுவாமி தேவஸ்தானம் உள்ளது. கந்தசஷ்டி திருவிழா 2ம் தேதியான நேற்று கோலாகலமாக துவங்கியது. ஏழு நாட்கள் நடக்கும் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் விரதம் இருப்பது வழக்கம்.

முதல் நாளான நேற்று காலை முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரங்கள் நடந்தன. மாலையில் சுவாமி வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான 7ம் தேதி சூரசம்ஹாரமும், 8ம் தேதி திருக்கல்யாணமும் நடக்கிறது.

ஒவ்வொரு நாளும், மூலவர், உற்சவர், ஞான தண்டாயுதபாணி சன்னதி, ஆறுமுகம் சன்னதி ஆகியவற்றின் முருகபெருமானின் துணைகொண்டு ஒவ்வொரு சன்னதியிலும் 1008 சகஸ்ரநாம மந்திரங்களுடன் கோடி அர்ச்சனை நடைபெற உள்ளது.

தேனுபுரீஸ்வரர் கோவில்

மாடம்பாக்கத்தில் பிரசித்திப் பெற்ற தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், அருணகிரி நாதரால் பாடல்பெற்ற சுப்பிரமணிய சுவாமிக்கு கந்தசஷ்டி விழா, நேற்று துவங்கியது.

ஏழு நாட்கள் நடக்கும் இவ்விழாவில், ஆறாம் நாளான நவ., 7ம் தேதி, 108 பால்குட அபிஷேகம் வெங்கிளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு, தேனுபுரீஸ்வரர் கோவிலை வந்தடைகிறது.

அன்று இரவு 7:30 மணிக்கு, சூரசம்ஹாரமும் நடக்கிறது. கடைசி நாளான, நவ., 8ம் தேதி, திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

பாம்பன் சுவாமி கோவில்

கந்த சஷ்டியை முன்னிட்டு, அறநிலையத்துறை சார்பில், கோவில்களில் கந்தசஷ்டி பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது. சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவிலில், 120 மாணவியரின் கந்த சஷ்டி பாராயணத்தை, அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.

பதிலாக புஷ்பாஞ்சலி

திருத்தணி முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழாவையொட்டி, அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.காலை 8:00 மணிக்கு, உற்சவர் சண்முகர் சிறப்பு அலங்காரத்தில், மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் எழுந்தருளினார்.லட்சார்ச்சனைக்கு கட்டணம் செலுத்திய பக்தர்கள் மட்டும், காவடி மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டு, உற்சவருக்கு லட்சார்ச்சனை நடத்தப்பட்டது. மற்ற பக்தர்கள் காவடி மண்டபத்தில் அமர்ந்து, லட்சார்ச்சனையை காண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.இன்று மூலவருக்கு பட்டு, நாளை 4ம் தேதி தங்க கவசம், 5ம் தேதி திருவாபரணம், 6ம் தேதி மூலவருக்கு வெள்ளி கவச அலங்காரம், 7ம் தேதி காலை சந்தன காப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.ஆறுபடை வீடுகளில் முருகன் கோவில்களில் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால், திருத்தணி கோவில் முருகப்பெருமான் சினம் தணிந்த இடம் என்பதால், சூரசம்ஹாரத்திற்கு பதிலாக புஷ்பாஞ்சலி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



- நமது நிருபர் குழு - -






      Dinamalar
      Follow us