sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி சுற்றுலாவை ரத்து செய்வோர் அதிகரிப்பு

/

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி சுற்றுலாவை ரத்து செய்வோர் அதிகரிப்பு

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி சுற்றுலாவை ரத்து செய்வோர் அதிகரிப்பு

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி சுற்றுலாவை ரத்து செய்வோர் அதிகரிப்பு


ADDED : ஏப் 25, 2025 01:03 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து, எல்லையோர மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தோர், தங்கள் பயணத்தை ரத்து செய்து வருகின்றனர்.

இதுகுறித்து, விமானம் மற்றும் ரயில்களில் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து வரும் ஏற்பாட்டாளர்கள் சிலர் கூறியதாவது:

ஆண்டுதோறும் ஏப்., மே, ஜூன் மாதங்களில், கோடை விடுமுறையில் அதிகமானோர் சுற்றுலா செல்வர். காஷ்மீர் பகுதிக்கு செல்ல ஏராளமானோர் விரும்புகின்றனர். இதற்காக, நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து, விமானங்கள் மற்றும் ரயில்களில், சுற்றுலா செல்லும் திட்டங்களில், பொதுமக்கள் அதிக அளவில் முன்பதிவு செய்திருந்தனர்.

சென்னையில் இருந்து மட்டும், வாரந்தோறும் 500 முதல் 1,000 பேர் வரை காஷ்மீர் செல்வர். இந்த ஆண்டும் விமானத்தில் அதிகம் பேர் செல்ல இருந்தனர். பஹல்காம் அருகே சுற்றுலா பயணியர் மீது நடந்த தாக்குதலால், தற்போது, காஷ்மீர் செல்ல மக்கள் விரும்பவில்லை. ஏற்கனவே சுற்றுலா செல்ல, முன்பதிவு செய்தவர்கள், தங்கள் பயணத்தை ரத்து செய்து வருகின்றனர்.

சிலர், மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங், சிக்கிம் மாநிலம் கேங்டாக், ஹிமாச்சல பிரதேசம் சிம்லா, குலுமணாலி போன்ற ஊர்களுக்கு, தங்கள் பயணத்திட்டத்தை மாற்றி வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us