ADDED : செப் 07, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு, 18 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த, 2016 செப்., 1ம் தேதிக்கு முன்னதாக ஓய்வு பெற்றவர்களுக்கு, 18 சதவீதமும், அதன் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு, 9 சதவீதமும் அகவிலைப்படி உயர்த்தப் பட்டுள்ளது.
அதன்படி, 2,000 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை ஓய்வூதியம் உயரும். இதனால், 93,000 ஓய்வூதியர்கள் பயனடைவர்.