sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விவசாயத்தில் சந்தையை திறக்க முடியாது அமெரிக்க வர்த்தக பேச்சில் இந்தியா உறுதி

/

விவசாயத்தில் சந்தையை திறக்க முடியாது அமெரிக்க வர்த்தக பேச்சில் இந்தியா உறுதி

விவசாயத்தில் சந்தையை திறக்க முடியாது அமெரிக்க வர்த்தக பேச்சில் இந்தியா உறுதி

விவசாயத்தில் சந்தையை திறக்க முடியாது அமெரிக்க வர்த்தக பேச்சில் இந்தியா உறுதி

10


UPDATED : ஜூலை 04, 2025 05:07 AM

ADDED : ஜூலை 03, 2025 11:02 PM

Google News

10

UPDATED : ஜூலை 04, 2025 05:07 AM ADDED : ஜூலை 03, 2025 11:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:விவசாயம், பால்வள பிரிவுகளில் சந்தையை திறந்து விட முடியாது என இந்தியா தெரிவிப்பதால், அமெரிக்காவுடனான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகிறது.

விரைவில் இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை கையெழுத்திட உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

எனினும், இருநாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாவதில் இழுபறி நீடித்து வருகிறது. அன்னிய முதலீடுகளை அனுமதிக்காமல் நீண்ட காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் விவசாயம், பால்வளம் ஆகியவற்றில் சந்தையை திறந்துவிட அமெரிக்கா கோரி வருகிறது. இதற்கு, இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

குறிப்பாக, சோளம், எத்தனால், சோயாபீன் மற்றும் பால் பொருட்கள் பிரிவுகளை ஒப்பந்த கட்டமைப்புக்குள் கொண்டு வர இயலாது என இந்தியா கைவிரித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் விவசாயத் துறை மற்றும் விவசாயிகளை வலுவிழக்கச் செய்யும் எந்த ஒரு முடிவுக்கும் இந்தியா சம்மதிக்காது என தெரிவித்தார்.

எத்தனால்


எத்தனால் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், அமெரிக்கா தான் உலகில் முன்னிலை வகிக்கிறது. கடந்தாண்டு அந்நாட்டிலிருந்து அதிக எத்தனால் இறக்குமதி செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. தொழில்துறை தேவைகளுக்காக மட்டுமே எத்தனால் இறக்குமதி செய்ய இந்தியா அனுமதிக்கிறது. இதைக் காட்டிலும் எரிபொருள் கலப்புக்கான எத்தனால் சந்தையே பெரியது என்பதால், அமெரிக்கா அதை குறிவைத்துள்ளது. ஆனால், இந்தியா அனுமதி வழங்க மறுக்கிறது.








      Dinamalar
      Follow us