sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போலீஸ் ராஜ்ஜியத்துக்கு நாடு செல்கின்றதா? ஐகோர்ட் அச்சம்

/

போலீஸ் ராஜ்ஜியத்துக்கு நாடு செல்கின்றதா? ஐகோர்ட் அச்சம்

போலீஸ் ராஜ்ஜியத்துக்கு நாடு செல்கின்றதா? ஐகோர்ட் அச்சம்

போலீஸ் ராஜ்ஜியத்துக்கு நாடு செல்கின்றதா? ஐகோர்ட் அச்சம்

1


ADDED : ஜூலை 26, 2025 04:34 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 04:34 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: காதல் விவகாரத்தில், சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கைதான, பெண்ணின் தந்தை உட்பட மூன்று பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், 'இந்த வழக்கை பார்க்கும் போது, நாடு போலீஸ் ராஜ்ஜியத்துக்கு செல்கிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது' என, தெரிவித்துள்ளது.

காதல் திருமண விவகாரத்தில், திருவள்ளூர் மாவட்டம் காளம்பாக்கத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுவன் கடத்தப்பட்டான். திருவாலங்காடு போலீசார், இவ்வழக்கில் தேனி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான வனராஜா, முன்னாள் எஸ்.ஐ., மகேஸ்வரி உள்ளிட்ட ஐந்து பேரை, கடந்த மாதம், 13ல் கைது செய்தனர்.

இந்த வழக்கில் கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம், கே.வி.குப்பம் எம்.எல்.ஏ., ஜெகன் மூர்த்தி மீதும் குற்றம் சாட்டப்பட்டது. ஜெகன்மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், அவருக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது. கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம், சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

இந்த கடத்தல் வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வரும் நிலையில், கைதான வனராஜா உள்ளிட்ட மூன்று பேர், தங்களுக்கு ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நேற்று பிறப்பித்த உத்தரவு:

வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கியமானவர்கள், இன்னும் கைது செய்யப்படவில்லை. மனுதாரர்களுக்கு ஜாமின் வழங்கினால், விசாரணை பாதிக்கப்படும் என்ற வாதத்தை ஏற்று, மூவரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டுள்ள போதும், தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் அறிக்கைகளை பார்க்கும் போது, விசாரணையில் போதுமான முன்னேற்றம் இல்லை என்பது தெரிகிறது. இதுவரை நடந்த விசாரணை நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இல்லை.

அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளதற்கு, இந்த வழக்கு ஒரு உதாரணம். சாதாரண மக்களின் வாழ்வு, சுதந்திரம் குறித்த கவலையை இவ்வழக்கு ஏற்படுத்தி உள்ளது. அத்துடன், நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர்களாக மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி மற்றும் சட்டசபை உறுப்பினர் ஒருவரும் உள்ளதால், காவல் துறை அறிக்கையில் கூறியபடி, விசாரணை முறையாக நடத்தப்படும் என்றும், காவல் துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை மீட்டெடுக்கப்படும் என்றும், இந்த நீதிமன்றம் நம்புகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us