sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியா? முதல்வர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

/

இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியா? முதல்வர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியா? முதல்வர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியா? முதல்வர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி


ADDED : டிச 08, 2025 04:02 PM

Google News

ADDED : டிச 08, 2025 04:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மக்களின் வரிப்பணத்தை நான்கரை ஆண்டுகளாக நாலாப்பக்கமும் சுரண்டித் தின்று, ஊழல் உடன்பிறப்புகளை ஒய்யாரமாக உலவவிடுவது தான் நாடு போற்றும் நல்லாட்சியா முதல்வர் ஸ்டாலின் அவர்களே என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் வழங்கப்பட்ட ஒப்பந்தங்களில் 7.5% முதல் 10% வரை தனது உறவினர்கள் வாயிலாக லஞ்சம் பெற்று திமுக அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் 1,020 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை புகார் அளித்திருக்கிறது.

இதே துறையில் பணம் பெற்றுக் கொண்டு அரசு வேலையை விற்று 888 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ள செய்தி வந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே, ஒப்பந்தம் வழங்குவதிலும் முறைகேடு நடந்துள்ள செய்தி வந்துள்ளது ஊழலின் ஊற்றுக்கண்ணாகவே திமுக அரசின் குடிநீர் வழங்கல் துறை மாறிப்போனதை வெளிப்படுத்துகிறது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 1,908 கோடி ரூபாய் ஊழல், நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ₹160 கோடி ஊழல், தோட்டக்கலைத் துறையில் ₹141 கோடி ஊழல், சென்னை மாநகராட்சியில் கழிவறை பராமரிப்பில் ₹364 கோடி ஊழல் என நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு புரிந்த ஊழல்களை எல்லாம் மொத்தமாகக் கணக்கிட்டால் கால்குலேட்டருக்கே கண்ணீர் வந்துவிடும்!

இப்படி மக்களின் வரிப்பணத்தை நான்கரை ஆண்டுகளாக நாலாப்பக்கமும் சுரண்டித் தின்று, ஊழல் உடன்பிறப்புகளை ஒய்யாரமாக உலவவிடுவது தான் நாடு போற்றும் நல்லாட்சியா முதல்வர் ஸ்டாலின் அவர்களே?இவ்வாறு அந்த அறிக்கையில் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us