sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நகைக்கடன் தள்ளுபடி தொகை கூட்டுறவு வங்கிகளுக்கு விடுவிப்பு

/

நகைக்கடன் தள்ளுபடி தொகை கூட்டுறவு வங்கிகளுக்கு விடுவிப்பு

நகைக்கடன் தள்ளுபடி தொகை கூட்டுறவு வங்கிகளுக்கு விடுவிப்பு

நகைக்கடன் தள்ளுபடி தொகை கூட்டுறவு வங்கிகளுக்கு விடுவிப்பு


ADDED : பிப் 08, 2025 09:38 PM

Google News

ADDED : பிப் 08, 2025 09:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், 2021 மார்ச் வரை வழங்கப்பட்ட, 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்களை தள்ளுபடி செய்து, தமிழக அரசு அந்த ஆண்டில் உத்தரவிட்டது.

இதையடுத்து, அத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட, 14.52 லட்சம் பேரின், 5,013 கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடியாகின.

இதற்காக, கூட்டுறவு நிறுவனங்களுக்கு தர வேண்டிய தொகையை, தவணை முறையில் அரசு வழங்குகிறது. ஆண்டுக்கு, 1,000 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டது. தற்போது, 606 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தங்க நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ், கூட்டுறவு நிறுவனங்களுக்கு வர வேண்டிய தொகை முழுதையும் அரசு விடுவித்து விட்டது; அதற்கு ஏற்ப ஒவ்வொரு சங்கம் மற்றும் வங்கிக்கும் தர வேண்டிய தொகையும் வழங்கப்பட்டு விட்டது' என்றார்.






      Dinamalar
      Follow us