நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த வீரபத்திரன், 25. இவர் டிச., 7ல் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கைதான தருவையை சேர்ந்த இசக்கிபாண்டி, 21, முத்து செல்வம், 22, பாலாஜி, 26 ஆகியோரை, எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவின் படி, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாப்பாக்குடி, சமத்துவபுரத்தைச் சேர்ந்த பத்திரகாந்த், 20 என்பவர் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால், அவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

