sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கவுதமியிடம் மோசடி; அழகப்பனுக்கு 'குண்டாஸ்'

/

கவுதமியிடம் மோசடி; அழகப்பனுக்கு 'குண்டாஸ்'

கவுதமியிடம் மோசடி; அழகப்பனுக்கு 'குண்டாஸ்'

கவுதமியிடம் மோசடி; அழகப்பனுக்கு 'குண்டாஸ்'


ADDED : பிப் 21, 2024 03:24 AM

Google News

ADDED : பிப் 21, 2024 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : நடிகை கவுதமியின் நிலம் மற்றும் பணத்தை மோசடி செய்த சினிமா பிரமுகர் அழகப்பன், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வசித்து வருபவர் நடிகை கவுதமி. அவரது குடும்ப நண்பர் வேளச்சேரியை சேர்ந்த சினிமா பிரமுகர் அழகப்பன், 63. இவர், ஸ்ரீபெரும்புதுார், திருவள்ளூர், துாத்துக்குடி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள, கவுதமிக்கு சொந்தமான நிலங்களை விற்றுத் தருவதாக கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்து உள்ளார்.

சென்னை நீலாங்கரையில், கவுதமிக்கு சொந்தமாக உள்ள, 6.5 ஏக்கர் நிலத்தை, மனைவி நாச்சாள், 57 பெயரில் பத்திரம் பதிவு செய்து, ஏமாற்றி உள்ளார்.

இதற்கு இவரது மகன், சிவா, 32, மருமகள் ஆர்த்தி, 28, கார் ஓட்டுனர் சதீஷ்குமார், 27 ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், கவுதமியின் வங்கி கணக்கில் இருந்து, அழகப்பன் மற்றும் குடும்பத்தினர், 9.90 கோடி ரூபாய் கையாடல் செய்து உள்ளனர்.

இதுகுறித்து கவுதமி அளித்த புகாரில், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ஜான் விக்டர் தலைமையிலான போலீசார் விசாரித்து, அழகப்பன் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில், அழகப்பனை குண்டர் தடுப்பு சட்டத்தில் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us