sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நீதி பரிபாலனத்தின் அடித்தளம் வழக்கறிஞர்கள் மணிப்பூர் தலைமை நீதிபதி சுந்தர் பெருமிதம்

/

நீதி பரிபாலனத்தின் அடித்தளம் வழக்கறிஞர்கள் மணிப்பூர் தலைமை நீதிபதி சுந்தர் பெருமிதம்

நீதி பரிபாலனத்தின் அடித்தளம் வழக்கறிஞர்கள் மணிப்பூர் தலைமை நீதிபதி சுந்தர் பெருமிதம்

நீதி பரிபாலனத்தின் அடித்தளம் வழக்கறிஞர்கள் மணிப்பூர் தலைமை நீதிபதி சுந்தர் பெருமிதம்

3


ADDED : அக் 24, 2025 02:10 AM

Google News

ADDED : அக் 24, 2025 02:10 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''வழக்கறிஞர்கள் தான் நீதிபதிகளாக பணியாற்றுகின்றனர். எனவே, நீதி பரிபாலனத்தின் அடித்தளமே வழக்கறிஞர்கள் தான்,'' என, மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.சுந்தர் தெரிவித்தார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பெறுப்பேற்றுள்ள எம்.சுந்தருக்கு, சென்னையில் நேற்று பாராட்டு வழா நடந்தது. விழாவில், அவர் பேசியதாவது:

நீதிபதியாக தகுதி பெற, தனியே பாடத்திட்டம் எதுவும் இல்லை. வழக்கறிஞர்கள் தான் நீதிபதிகளாக பணியாற்றுகின்றனர்.

எனவே, நீதி பரிபாலனத்தின் அடித்தளமே வழக்கறிஞர்கள் தான். சென்னை உயர் நீதிமன்றத்தில், நான் நீதிபதியாக இருந்தபோது, சில வழக்குகளில் கடுமையாக நடந்து கொண்டிருக்கலாம். சில சமயங்களில் சிலரிடம் கடினமாக பேசியிருக்கலாம்.

அதை தனிப்பட்ட விமர்சனமாக எடுத்து கொள்ளாமல், நீதித்துறை அமைப்பின் மரியாதையாகவும், எனது உண்மையான அக்கறையாகவும், நீங்கள் கருத வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றம் மிகச் சிறந்த பாரம்பரியம் கொண்டது. இங்கிருந்து எங்கே சென்றாலும் மதிப்பு பெறுவீர். உங்களின் ஒழுக்கம், சட்ட அறிவு மற்றும் உயர்ந்த நடைமுறைகள் வாயிலாக, மக்கள் உங்களை பாராட்டுவர்.

எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்ணியத்தையும், மரியாதையையும், எப்போதும் காக்க வேண்டும். இன்று இளம் வழக்கறிஞர்களாக இருப்போர், நாளை நீதிபதியாக மாறுவர். ஒவ்வொரு வழக்கறிஞரின் அலுவலகமும், ஒரு பயிலகமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us