தி.மு.க., ஆட்சியை அகற்ற 2025ல் அடித்தளம்: ராமதாஸ்
தி.மு.க., ஆட்சியை அகற்ற 2025ல் அடித்தளம்: ராமதாஸ்
ADDED : ஜன 01, 2025 06:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
'அறவழி மீறி குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரை விடக் கொடியதாகும்' என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி, திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்.
தமிழகத்தில் இப்போது நிலவும் கொலைத் தொழில் ஆட்சி அகற்றப்பட, 2025ம் ஆண்டில் வலிமையான அடித்தளம் அமைக்க வேண்டும்.
வரும் 2026ல், செங்கோன்மை அதிகாரத்தில் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளது போல, தமிழகத்தில் நேர்மையான ஆட்சி அமைய வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் பா.ம.க.,வினர் எதிர்பார்ப்பது நிச்சயம் நடக்கும். நினைத்ததை சாதிக்க பா.ம.க.,வினர் கடுமையாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

