sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பயிர் காப்பீடு நீட்டிக்க கோரி கடிதம்

/

பயிர் காப்பீடு நீட்டிக்க கோரி கடிதம்

பயிர் காப்பீடு நீட்டிக்க கோரி கடிதம்

பயிர் காப்பீடு நீட்டிக்க கோரி கடிதம்

1


ADDED : நவ 15, 2024 11:51 PM

Google News

ADDED : நவ 15, 2024 11:51 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில் வழக்கமாக ஆகஸ்ட் மாதம், சம்பா சாகுபடி பணியில், விவசாயிகள் கவனம் செலுத்துவது வழக்கம். நடப்பாண்டு பல மாவட்டங்களில், பருவமழை தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், காலதாமதமாக நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

தற்போது வரை சாகுபடி பரப்பு, 25 லட்சம் ஏக்கரை எட்டியுள்ளது. இம்மாத இறுதிக்குள் 30 லட்சம் ஏக்கரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயிர் பாதிப்பு ஏற்படும்போது, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்வதற்காக, சம்பா பயிர்களுக்கு காப்பீடு செய்ய, தமிழக வேளாண் துறை நடவடிக்கை எடுத்துஉள்ளது.

காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிந்து விட்டது. புதிதாக நடவு மற்றும் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு, காப்பீடு செய்ய வேண்டிஉள்ளது.

கால அவகாசம் முடிந்துள்ளதால், மழை, வெள்ள பாதிப்பு ஏற்படும்போது, விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

எனவே, காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை, இம்மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என, மத்திய வேளாண் துறைக்கு, தமிழக வேளாண் துறை செயலர் அபூர்வா கடிதம் எழுதியுள்ளார்.






      Dinamalar
      Follow us