ADDED : மே 22, 2025 01:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: வனத்துறை சார்பில் அமைக்கப்ட்டுள்ள அலையாத்தி மரக்கன்றுகள் நடும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
சென்னை அடுத்த ஓ.எம்.ஆர்., எனும் பழைய மாமல்லபுரம் சாலை கழிப்பட்டூர் பகுதியில், பகிங்ஹாம் கால்வாயை ஒட்டி வனத்துறை சார்பில், அலையாத்திக் காடு உருவாக்க, 'மீன் முள்' வடிவில் கரைகள் அமைத்து, ஐந்து வகைகளைச் சேர்ந்த 12,500 அலையாத்தி மரக்கன்றுகள் நடும் பணிகள் நிறைவடைந்துள்ளன.