அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வுக்கு பலர் வருவர்
அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வுக்கு பலர் வருவர்
ADDED : நவ 09, 2025 01:04 AM
ஒரு கட்சியில் இருந்து ஒருவர் விலகி இன்னொரு கட்சிக்கு வருவது என்பது, அவர்களாகவே எடுக்கும் முடிவு. அந்த வகையில் தான், மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி, தி.மு.க.,வுக்கு பலரும் வருகின்றனர். யாரையும் ஒரு நாளும், தி.மு.க.,வுக்கு வாருங்கள் எனச் சொல்லி, யாருக்கும் அழுத்தம் கொடுத்ததில்லை; அப்படி செய்ய வேண்டிய அவசியம் தி.மு.க.,வுக்கு இல்லை. தேடி வருவோரை மதித்து வரவேற்று, அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து, கட்சிக்காக பணியாற்ற வேண்டிய பொறுப்பை அளிப்பது தி.மு.க.,வின் கடமை.
அ.தி.மு.க.,வில் பலரும் அதிருப்தியாக உள்ளனர். அ.தி.மு.க.,வைக் காட்டிலும் தி.மு.க.,வே சிறந்தது என எங்களைத் தேடி அவர்கள் வருகின்றனர். அந்த வகையில் தான், தி.மு.க.,வில் இணைந்திருக்கிறார், எம்.எல்.ஏ.,வான மனோஜ் பாண்டியன். அவரை தொடர்ந்து நிறைய பேர் தி.மு.க.,வுக்கு வர உள்ளனர்.
- முத்துசாமி, தமிழக அமைச்சர், தி.மு.க.,

