அ.தி.மு.க., பிரமுகர் மீதான பால் கலப்பட வழக்கு ரத்து
அ.தி.மு.க., பிரமுகர் மீதான பால் கலப்பட வழக்கு ரத்து
ADDED : செப் 06, 2025 12:56 AM
சென்னை:ஆவின் பாலில் தண்ணீர் ஊற்றி கலப்படம் செய்ததாக, அ.தி.மு.க., பிரமுகர் வைத்தியநாதன், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டு உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த ஊரல் கிராமத்தில், 'டேங்கர்' லாரியில் எடுத்து வரப்பட்ட ஆவின் பாலில் தண்ணீர் ஊற்றி, கலப்படம் செய்த மோசடி கண்டுபிடிக்கபட்டது.
கடந்த, 2014ல் நடந்த இந்த மோசடி புகார் தொடர்பாக, அ.தி.மு.க., பிரமுகர் வைத்தியநாதன், அவரது மனைவி, சென்னை ஆவின் நிலைய பால் தரக்கட்டுப் பாட்டு மேலாளர் அப்துல் ரஹீம் உட்பட, 20க்கும் மேற்பட்டோருக்கு எதிராக, விழுப் புரம் மாவட்டம் வெள்ளி மேடுபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பின், இந்த வழக்கு விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. விழுப்புரம் நீதிமன்றத்தில், வைத்தியநாதன், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, குற்றம் சாட்டப்பட்ட வைத்தியநாதன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:
பாலில் தண்ணீர் கலப்பட முறைகேடு தொடர்பாக, ஆவின் நிறு வனம் விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கை யில், 'டேங்கர் லாரியில் இருந்து பால் திருடப்படவில்லை; டேங்கர் லாரிக்கு வைக்கப்பட்ட, 'சீல்' சேதப்படுத்தப்படவில்லை; பாலில் எந்த கலப்படமும் செய்யப்படவில்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலப்பட குற்றச் சாட்டை நிரூபிக்க மாதிரி சேகரிக்கப்படவில்லை; நிபுணர் கருத்துக்காகவும் அனுப்பப்படவில்லை. சக குற்றவாளியின் வாக்குமூலத்தை தவிர, குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேறு எந்த ஆதாரமும் இல்லை.
கடந்த, 2014ல் தொடரப்பட்ட இந்த வழக்கை, மேலும் தொடர்வதன் வாயிலாக எந்த பயனும் இல்லை.
எனவே, மனுதாரர்கள் வைத்திய நாதன், அவரது மனைவி, சென்னை ஆவின் நிலைய பால் தரக்கட்டுப்பாட்டு மேலாளர் அப்துல்ரஹீம் உள்ளிட்டோர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.