sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு சென்னை, கோவையில் விடுதிகள் அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு

/

எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு சென்னை, கோவையில் விடுதிகள் அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு

எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு சென்னை, கோவையில் விடுதிகள் அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு

எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு சென்னை, கோவையில் விடுதிகள் அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு


ADDED : ஏப் 27, 2025 01:31 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''சென்னை, கோவையில், 80 கோடி ரூபாயில், எஸ்.சி., - எஸ்.டி., முன்மாதிரி மாணவர் விடுதிகள் கட்டப்படும்,'' என, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்தார்.

சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்ய, மாவட்ட கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, அரசு மானியத்துடன், 25 கோடி ரூபாயில், 'உறுதுணை' குறு மற்றும் நுண் கடன் திட்டம் செயல்படுத்தப்படும்.

உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள வணிக வளாகங்களில், 15 கோடி ரூபாயில், 'தாட்கோ வணிக வளாக திட்டம்' செயல்படுத்தப்படும். பழங்குடியினர் உழவர் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, 14 கோடி ரூபாயில், 'ஐந்திணை' பசுமை பண்ணை திட்டம் செயல்படுத்தப்படும்.

பழங்குடியினருக்கு உயர்தர மருத்துவ சேவைகள், அவர்கள் வசிக்கும் இடத்திலேயே கிடைப்பதை உறுதி செய்ய, 10 கோடி ரூபாயில், தொல்குடி நலவாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்காக, சென்னை, கோவையில் 80 கோடி ரூபாயில், உடற்பயிற்சி கூடம், பார்வையாளர் அறை, பன்னோக்கு அரங்கம் போன்ற நவீன வசதிகளுடன், முன்மாதிரி விடுதிகள் கட்டப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us