sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க.,வில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதில் அமைச்சர் தியாகராஜன் ஓரங்கட்டப்பட்டாரா அமைச்சர் மூர்த்தியின் கை ஓங்கிய பின்னணி என்ன

/

தி.மு.க.,வில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதில் அமைச்சர் தியாகராஜன் ஓரங்கட்டப்பட்டாரா அமைச்சர் மூர்த்தியின் கை ஓங்கிய பின்னணி என்ன

தி.மு.க.,வில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதில் அமைச்சர் தியாகராஜன் ஓரங்கட்டப்பட்டாரா அமைச்சர் மூர்த்தியின் கை ஓங்கிய பின்னணி என்ன

தி.மு.க.,வில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதில் அமைச்சர் தியாகராஜன் ஓரங்கட்டப்பட்டாரா அமைச்சர் மூர்த்தியின் கை ஓங்கிய பின்னணி என்ன


ADDED : பிப் 15, 2025 04:51 AM

Google News

ADDED : பிப் 15, 2025 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தி.மு.க.,வில் அமைப்பு ரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதில் தமிழகத்தில் அதிக சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்ட செயலாளராக (மா.செ.,) அமைச்சர் மூர்த்தியின் கை ஓங்கியுள்ளது. இதன் மூலம் மதுரையில் அமைச்சர் தியாகராஜன், மாவட்ட செயலாளர் தளபதி ஓரங்கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழகத்தில் 2026ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தற்போதுள்ள 72 மாவட்டங்களை 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் அடிப்படையில் மாவட்டங்கள் அதிகரிக்கப்படும். இதன் மூலம் மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என சீனியர் நிர்வாகிகள் பலர் கனவில் இருந்தனர். ஆனால் மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் 4 புதிய மாவட்டங்கள் உருவாக்கி 4 பேருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மதுரையில் மொத்தமுள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கு தற்போது மூன்று மாவட்ட செயலாளர்கள் தான் உள்ளனர். 2 தொகுதிகள் வாரியாக பிரிக்கப்பட்டால் மேலும் 2 பேருக்கு மா.செ., பதவிகள், கிடைக்கும். மதுரை நகர் தி.மு.க.,வில் வடக்கு, தெற்கு, மேற்கு, மத்தி என 4 சட்டசபை தொகுதிகள் நகர் செயலாளர் தளபதி வசம் இருந்தது. இதில் 2தொகுதிகளை பிரித்து புதிய மாவட்டம் கிடைக்கும் என அமைச்சர் தியாகராஜன் ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர்.

மதுரை வடக்கு மாவட்ட செயலாளரான மூர்த்தியிடம் கிழக்கு, மேலுார், சோழவந்தான் என 3 சட்டசபை தொகுதிகள் இருந்த நிலையில், நகர்ப் பகுதியில் உள்ள மேற்கு தொகுதியும் அவரது கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டது. இதையடுத்து மாநிலத்தில் அதிக தொகுதிகளை கொண்ட மா.செ.,வாக மூர்த்தி உள்ளார்.

பின்னணி என்ன


தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: 2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளை கைப்பற்றுவது முதல்வர் ஸ்டாலினின் இலக்கு. அதற்கு ஏற்ப செயல்படும் முக்கிய அமைச்சர்கள், மா.செ.,க்களுக்கு கூடுதல் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் அமைச்சர் மூர்த்தியின் வடக்கு மாவட்டத்தில் மேலுார் (பெரியபுள்ளான்), மதுரை மேற்கு (முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ) தொகுதிகள் அ.தி.மு.க., வசம் உள்ளது. இத்தொகுதிகளை 2026ல் தி.மு.க., கைப்பற்ற வேண்டும் என மூர்த்திக்கு 'டார்க்கெட்' வைக்கப்பட்டுள்ளது.

மதுரைநகர்ப் பகுதியில்உள்ள 3 தொகுதிகளும் தி.மு.க., வசமே உள்ளன. மேற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூவுக்கு எதிராக மூர்த்தியால் தான் களமிறங்க முடியும் என தலைமை முடிவு செய்து அத்தொகுதியை அவருக்கு மாற்றியது. மொத்தத்தில் 10 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என தலைமை உத்தரவிட்டுள்ளது என்றனர்.

மதுரை மேயர் தேர்வுகளமும் இனி மாறும்

இதுவரை மதுரை நகர் பகுதி அமைச்சர் தியாகராஜன், நகர் செயலாளர் தளபதி கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது அதிக நகர்ப் பகுதிகளை கொண்ட மேற்கு தொகுதி மூர்த்தியிடம் சென்றுள்ளது. இத்தொகுதியில் 22 மாநகராட்சி வார்டுகள் உள்ளன. ஏற்கனவே அவர் வசம் உள்ள கிழக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட விரிவாக்க பகுதிகளிலும் 28 க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. மொத்தம் 100க்கு 50க்கும் மேற்பட்ட மாநகராட்சி வார்டுகள் மூர்த்தி கட்டுப்பாட்டில் வருவதால் மாநகராட்சி மேயர் பதவியை அவர் சிபாரிசு செய்யும் வாய்ப்பு கிடைக்கும். தற்போதைய மேயர் இந்திராணி பொன்வசந்த், அமைச்சர் தியாகராஜன் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.








      Dinamalar
      Follow us