sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போக்குவரத்து கழகங்களுக்கு புதிய 'ஏசி' பஸ்கள் தயார் கேமரா உள்ளிட்ட வசதியுண்டு

/

போக்குவரத்து கழகங்களுக்கு புதிய 'ஏசி' பஸ்கள் தயார் கேமரா உள்ளிட்ட வசதியுண்டு

போக்குவரத்து கழகங்களுக்கு புதிய 'ஏசி' பஸ்கள் தயார் கேமரா உள்ளிட்ட வசதியுண்டு

போக்குவரத்து கழகங்களுக்கு புதிய 'ஏசி' பஸ்கள் தயார் கேமரா உள்ளிட்ட வசதியுண்டு


ADDED : மார் 21, 2025 01:13 AM

Google News

ADDED : மார் 21, 2025 01:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:நவீன தீயணைப்பு வசதி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன், புதிய, 'ஏசி' விரைவு பஸ்கள், அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வர உள்ளன.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, புதிய பஸ்கள் வாங்க அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

அந்த வகையில், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட டெண்டர் அடிப்படையில், 50 விரைவு பஸ்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளன. இந்த புதிய பஸ்களில், ஆம்னி பஸ்களுக்கு இணையான, நவீன வசதிகள் இடம் பெறுகின்றன. குறிப்பாக, தானியங்கி தீயணைப்பு வசதி இடம் பெற்றுள்ளது.

இதன் வாயிலாக, பஸ்சுக்குள் சிறிய புகை வெளியேறினாலும் அலாரம் அடித்து விடும்.

அது, தீயாக இருக்கும் பட்சத்தில், ஓட்டுநர் பட்டனை அழுத்தியதும், ரசாயனம் வெளியேறி தீ அணைக்கப்படும். அதிகமாக தீ பரவினால், ஓட்டுநரை எதிர்பாராமல் தீயணைக்கும் அமைப்பு இயங்கி விடும். இந்த அமைப்பு இன்ஜினில் மட்டுமின்றி, பயணியர் பகுதியிலும் பொருத்தப்பட்டுள்ளது. வண்டியை பின்நோக்கி இயக்க ஏதுவாக, கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

அனைத்து இருக்கைக்கு அருகிலும், அவசரகால பட்டன் உள்ளது. 29 'ஏசி' விரைவு பஸ்களும், 21 ஏசி இல்லாத பஸ்களும் அடுத்த மாதம் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us