மாநகராட்சி 'டெண்டர்' முறைகேடு லஞ்ச ஒழிப்புத்துறை புது விளக்கம்
மாநகராட்சி 'டெண்டர்' முறைகேடு லஞ்ச ஒழிப்புத்துறை புது விளக்கம்
ADDED : செப் 20, 2025 02:27 AM
சென்னை:மாநகராட்சிகளில், 'டெண்டர்' வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆவணங்களை மொழிபெயர்த்து, மத்திய அரசு தாக்கல் செய்ய வற்புறுத்துவதால், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீது வழக்கு தொடருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
குற்றப்பத்திரிகை அ.தி.மு.க., ஆட்சியில் உள்ளாட்சி துறையில் முறைகேடு நடந்தது தொடர்பான வழக்கில், தனியார் நிறுவனங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில், அறப்போர் இயக்கம் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ரா ஜ்திலக் ஆஜராகி, ''மத்திய அரசு, கடந்த 2024 முதல் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது.
''அதன்படி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு வழக்குத் தொடர அனுமதி கோரும்போது, உள்ளூர் மொழிகளில் உள்ள அனைத் து ஆவணங்களையும் மொழிபெயர்த்து சமர்ப்பிக்க வேண்டு ம்.
''முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில், 41,000 பக்கங்களுக்கு மேல் ஆவணங்கள் உள்ளன. எனவே, அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது,'' என்றார்.
அறப்போர் இயக்கம் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.தன்வி, ''வேலுமணி மீது வழக்கு தொடர, கடந்தாண்டு பிப்., 12ல் தமிழக சபாநாயகரிடம் இருந்து அனுமதி பெறப்பட்டு உள்ளது.
மனு தாக்கல் ஆ னால், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான கே.எஸ்.கந்தசாமி, கே.விஜயகார்த்திகேயன் ஆகியோர் மீது வழக்கு தொடர, மத்திய அரசிடம் இருந்து, இன்னும் அனுமதி பெறப்படவில்லை என, லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது,'' என்றார்.
முன்னதாக, லஞ்ச ஒழிப்பு துறை தாக்கல் செய்த கூடுதல் பதில் மனுவுக்கு பதிலளித்து, அறப்போர் இயக்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு பதிலளிக்க லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, இந்த வழக்கின் இறுதி விசாரணையை, அக்., 13ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.