sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 அரிய வகை விலங்குகள் பாதுகாப்பு திட்டத்தில் நீலகிரி மரநாய் சேர்ப்பு

/

 அரிய வகை விலங்குகள் பாதுகாப்பு திட்டத்தில் நீலகிரி மரநாய் சேர்ப்பு

 அரிய வகை விலங்குகள் பாதுகாப்பு திட்டத்தில் நீலகிரி மரநாய் சேர்ப்பு

 அரிய வகை விலங்குகள் பாதுகாப்பு திட்டத்தில் நீலகிரி மரநாய் சேர்ப்பு


ADDED : டிச 06, 2025 01:56 AM

Google News

ADDED : டிச 06, 2025 01:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'அழிவின் விளிம்பில் உள்ள அரியவகை விலங்குகள் பாதுகாப்பு நிதி திட்டத்தில், நீலகிரி மரநாய் சேர்க்கப்பட்டுள்ளது' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில், நீலகிரி உட்பட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், 'நீலகிரி மார்டின்' எனப்படும் நீலகிரி மரநாய் காணப்படுகிறது. வனப்பகுதிகளில் அரிதாக மட்டுமே, இதை பார்க்க முடியும்.

கீரிப்பிள்ளை போன்ற உருவத்தில், குறிப்பிட்ட சில வேறுபாடுகளுடன், கருப்பு நிறத்தில் இது காணப்படும். மனிதர்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், அரிதாக மட்டுமே வரும் என்பதால், இதை அடிக்கடி பார்க்க முடியாது.

தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில், எத்தனை மரநாய்கள் உள்ளன என்ற விபரங்கள் தொகுக்கப்படவில்லை. அழியும் அபாயத்தில் உள்ள, நீலகிரி மரநாய் இனத்தை பாதுகாக்க, வனத்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் அரிதாக காணப்படும் முள்ளெலி போன்ற உயிரினங்களை பாதுகாக்கும் திட்டத்துக்கு, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், நீலகிரி மரநாய் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்படும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us