sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

2 நாள் பேச்சில் உடன்பாடு இல்லை தொடர்கிறது ஆம்னி பஸ்கள் நிறுத்தம்

/

2 நாள் பேச்சில் உடன்பாடு இல்லை தொடர்கிறது ஆம்னி பஸ்கள் நிறுத்தம்

2 நாள் பேச்சில் உடன்பாடு இல்லை தொடர்கிறது ஆம்னி பஸ்கள் நிறுத்தம்

2 நாள் பேச்சில் உடன்பாடு இல்லை தொடர்கிறது ஆம்னி பஸ்கள் நிறுத்தம்


ADDED : நவ 12, 2025 01:54 AM

Google News

ADDED : நவ 12, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் கமிஷனருடன், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் நடத்திய பேச்சில், உடன்பாடு ஏற்படாததால், வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் நிறுத்தம் தொடர்கிறது.

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து, கேரளா, கர்நாடகா, ஆந்திரா இடையே, 600 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள் சபரிமலை செல்லும் சீசன் துவங்க உள்ளதால், கூடுதல் ஆம்னி பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் நடந்து வந்தன.

ஆதரவு இந்நிலையில், தமிழகத்தில் இருந்து, கடந்த 7ம் தேதி, கேரள மாநில எல்லையை அடைந்த, தமிழக ஆம்னி பஸ்களுக்கு, அம்மாநில போக்குவரத்து அதிகாரிகள், 70 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், வெளி மாநிலங்களுக்கு பஸ்கள் இயக்குவதை நிறுத்தினர்.

அவர்கள் போராட்டத்திற்கு, மற்ற மாநில ஆம்னி பஸ் உரிமையாளர்களும், ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இப்பிரச்னைக்கு தீர்வு காண, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருடன், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் நேற்றுமுன்தினம் பேச்சு நடத்தினர்.

இதையடுத்து, போக்குவரத்து கமிஷனர் கஜலட்சுமியுடன், ஆம்னி பஸ் உரிமையாளர்கள், சென்னையில் நேற்று பேச்சு நடத்தினர். இதிலும் தீர்வு ஏற்படவில்லை.

இதனால், ஆம்னி பஸ்களை வெளி மாநிலங்களுக்கு இயக்குவது நிறுத்தம் தொடர்கிறது.

600 பஸ் சேவை நிறுத்தம் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, இன்று அறிவிப்போம் என, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

கடந்த, 2021 முதல், பிற மாநில பதிவு எண் உடைய வாகனங்கள் தமிழகத்திற்குள் வரும் போது, தமிழக அரசு சாலை வரி வசூல் செய்து வருகிறது.

தமிழகத்தை போலவே கர்நாடகா, கேர ளாவிற்கு தமிழக பதிவு எண் உடையட ஆம்னி பஸ்கள் செல்லும் போது, சாலை வரி விதிக்க, அம்மாநில அரசுகள் துவங்கியுள்ளன.

கேரள அரசு, சாலை வரி மற்றும் அபராதமாக ஆம்னி பஸ்களுக்கு, 70 லட்சம் ரூபாயும், கர்நாடகா அரசு, 1.15 கோடி ரூபாய் அளவிற்கும் வசூல் செய்துள்ளன. தற்போதும் வசூல் செய்து வருகின்றனர்.

இதனால், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்படுகிறோம். எனவே, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு இடையே இயங்கும், 600 ஆம்னி பஸ்கள் சேவையை நிறுத்தி உள்ளோம்.

தமிழக அரசு, பிற மாநில வாகனங்களுக்கு சாலை வரி வசூலிப்பதை நிறுத்தினால், மற்ற மாநில அரசுகளும் நிறுத்தி விடும். அதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us