sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


ADDED : அக் 28, 2024 10:39 PM

Google News

ADDED : அக் 28, 2024 10:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அக்டோபர் 29, 1988

கர்நாடக மாநிலம், மங்களூரு கலெக்டராக இருந்த ஆனந்தய்யா தாரேஷ்வர் -- கிரிஜாம்மா தம்பதியின்மகளாக, 1903, ஏப்ரல் 3ல் பிறந்தவர்,கமலாதேவி சட்டோபாத்யாய்.இவர்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற எம்.ஜி.ரானாடே, கோபால கிருஷ்ண கோகலே, அன்னி பெசன்ட் ஆகியோரால், விடுதலை இயக்கத்தில் ஆர்வம் கொண்டார்.

தன் 14வது வயதில் திருமணம் செய்து, 16 வயதில் விதவையானார். சென்னை ராணிமேரி கல்லுாரியில் படிக்க வந்து, சரோஜினி நாயுடுவின் தோழியாகி, அவரது சகோதரர் ஹரீந்திரநாத்சட்டோபாத்யாயை மறுமணம் செய்தார். காந்தியின்அழைப்பால், 'ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம்' உள்ளிட்டவற்றில் பெண் அணிக்கு தலைமையேற்றார்.

பாகிஸ்தான் பிரிவினை கலவரத்தின்போது, ஹரியானாவின் பரிதாபாதில், 50,000 பேருக்கு மருத்துவ உதவியும், உணவும் அளித்தார். இந்திய கைவினை பொருள் வாரியம், கைவினை கவுன்சில், தேசிய நாடகப் பள்ளிகளை நிறுவ பாடுபட்ட இவர், 1988ல் தன் 85வது வயதில், இதே நாளில் மறைந்தார்.






      Dinamalar
      Follow us