உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜன 23, 2024 05:29 AM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், பல்வேறு இடங்களில், 21.81 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள, 16 நவீன நெல் சேமிப்பு தளங்களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
அத்துடன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில், பணியின் போது இறந்த 71 பேரின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில், பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
வாணிப கழக அலுவலர்கள், பணியாளர்கள், சுமை துாக்கும் தொழிலாளர்கள்; சேமிப்பு கிடங்கு நிறுவன அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோரின் ஒரு நாள் ஊதியமான, 1.01 கோடி ரூபாய்க்கான காசோலையை, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.
