sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இரட்டை இலை ஒதுக்க தடை; மனு மீது 7 நாளில் உத்தரவு

/

இரட்டை இலை ஒதுக்க தடை; மனு மீது 7 நாளில் உத்தரவு

இரட்டை இலை ஒதுக்க தடை; மனு மீது 7 நாளில் உத்தரவு

இரட்டை இலை ஒதுக்க தடை; மனு மீது 7 நாளில் உத்தரவு


ADDED : நவ 26, 2024 03:12 AM

Google News

ADDED : நவ 26, 2024 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.,வுக்கு ஒதுக்க தடை கோரிய விண்ணப்பத்தின் மீது, ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'அ.தி.மு.க.,வில் உள்கட்சி விவகாரம், கட்சி விதிகளுக்கு முரணாக செயல்பட்டது தொடர்பாக, 2017 முதல் 2022 வரை பல புகார்களை, தேர்தல் ஆணையத்துக்கு அளித்துள்ளேன்.

'கட்சி பிரச்னை தொடர்பாக தாக்கல் செய்துள்ள சிவில் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.,வுக்கு ஒதுக்கக்கூடாது எனவும், தேர்தல் ஆணையத்திடம் கோரி உள்ளேன்; எந்த பதிலும் இல்லை. என் மனு மீது விசாரணை நடத்த, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 'கடந்த பிப்ரவரியில் அளித்த விண்ணப்பத்தின் மீது, தேர்தல் ஆணையம் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை' என்று, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் விண்ணப்பத்தின் மீது ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, விசாரணையை, டிசம்பர் 2க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.






      Dinamalar
      Follow us