கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது சுற்றறிக்கை அனுப்ப அறநிலைய துறைக்கு உத்தரவு
கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது சுற்றறிக்கை அனுப்ப அறநிலைய துறைக்கு உத்தரவு
ADDED : அக் 24, 2025 12:51 AM
சென்னை:'கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என, மாநிலம் முழுதும் உள்ள கோவில்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்' என, அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவர் தாக்கல் செய்த மனு:
சென்னை ராசப்பா தெருவில் கந்தகோட்டம் முத்து குமார சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான பெரும் பாலான சொத்துக்கள், பக்தர்களால் தானமாக வழங்கப்பட்டவை.
பார்க் டவுன் நைனியப்பா நாயக்கன் தெரு, சவுகார்பேட்டை அன்ன பிள்ளை தெரு, பெரியமேடு கற்பூர முதலி தெரு போன்றவற்றில், இக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன.
இங்குள்ள கட்டடங்களை இடித்து விட்டு, வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகள் கட்டும் பணியை அறநிலைய துறை துவக்கி உள்ளது.
அதுவும் முத்துகுமார சாமி கோவிலின் நிதியை வைத்து, வணிக வளாகங்கள், குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என, உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதை அறிந்தும், கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டும் பணியை, அறநிலைய துறை அதிகாரிகள் துவக்கி உள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 4ல், இது தொடர்பாக அளித்த மனுவுக்கு, அதிகாரிகள் இதுவரை பதில் அளிக்கவில்லை. இருப்பினும், வணிக வளாகங்கள் பணிக்கு கோவில் நிதியை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகள் கட்டும் பணிக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன், முருகானந்தம் ஆஜராகினர்.
அப்போது, 'கோவில் நிதியை பயன்படுத்தி வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை மீறி, பல கோவில் களுக்கு சொந்தமான இடங் களில், கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன' என்றனர்.
தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''கட்டுமானப் பணிகள் தற்போது 80 சதவீதம் முடிந்த நிலையில், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஏழு கோடி
தொடர்ச்சி 5ம் பக்கம்

