sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என விஜய் ஆவேசம்!

/

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என விஜய் ஆவேசம்!

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என விஜய் ஆவேசம்!

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என விஜய் ஆவேசம்!

24


UPDATED : ஜூலை 14, 2025 06:39 AM

ADDED : ஜூலை 14, 2025 12:07 AM

Google News

UPDATED : ஜூலை 14, 2025 06:39 AM ADDED : ஜூலை 14, 2025 12:07 AM

24


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில் போலீஸ் விசாரணையின் போது இறந்தவர்களின் மரணத்திற்கு நீதி கேட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், 'தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை' என ஆவேசப்பட்டார். மேலும், 'ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,வின் கைப்பாவையாக சி.பி.ஐ., உள்ளது; அதன் பின்னால் முதல்வர் ஒளிந்து கொள்வது ஏன்' என்றும் கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் நடந்த போலீஸ் நிலைய மரணங்களுக்கு நீதி கேட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், த.வெ.க., தலைவர் விஜய் பேசியதாவது:

திருப்புவனம் அஜித்குமார் சாதாரண எளிய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர். அவர் குடும்பத்திற்கு நடந்த கொடுமைக்கு முதல்வர் மன்னிப்பு கேட்டார்; அதில், தவறில்லை.

நிவாரணம்


அதோடு சேர்த்து இதையும் பண்ணிடுங்க முதல்வரே. அதாவது, உங்கள் ஆட்சிக் காலத்தில், போலீஸ் விசாரணையில், 24 பேர் இறந்துள்ளனர். அந்த, 24 பேரின் குடும்பத்திற்கும், நீங்கள் தயவு செய்து சாரி சொல்லிடுங்க.

அஜித்குமார் குடும்பத்திற்கு நிவாரணம் தந்தது போல, 24 பேர் குடும்பத்திற்கும் நிவாரணம் கொடுத்துடுங்க.

'சாத்தான்குளம் ஜெபராஜ், பெனிக்ஸ் போலீஸ் நிலைய மரண வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டது, தமிழக காவல் துறைக்கு அவமானம்' என்று அன்று அறிக்கை வெளியிட்டீர்கள்.

இன்றைக்கு நீங்கள் சி.பி.ஐ., உத்தரவிட்டதற்கு என்ன பேருங்க. அன்றைக்கு நீங்க சொன்னதும், இன்றைக்கு நடக்கறதும் அதேதான். ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,வின் கைப்பாவையாக சி.பி.ஐ., உள்ளது. அதன் பின்னால் ஏன் போய் ஒளிந்து கொள்கிறீர்கள்.

பயமே காரணம்


'அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையை, நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து நடத்த வேண்டும்' என, த.வெ.க., சார்பில், 'ஸ்ட்ராங்' ஆக கேட்டுஉள்ளோம்.

மத்திய அரசு பின்னால் ஒளிந்து கொள்வதற்கு, அந்த பயம் தான் காரணம். உங்கள் ஆட்சியில் எத்தனை, 'அட்ராசிட்டீஸ்!'

அண்ணா பல்கலை பாலியல் சம்பவம் முதல் அஜித்குமார் கொலை வரை, எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்கிறது. அப்படி நீதிமன்றம் கேள்வி கேட்க வேண்டும் என்றால், 'நீங்க எதுக்கு; உங்க ஆட்சி எதுக்குங்க முதல்வரே. உங்களுக்கு முதல்வர் பதவி எதுக்குங்க?'

எப்படி கேட்டாலும், உங்களிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவது கிடையாது. மேக்சிமம், 'சாரி'மா என்ற பதில் தான் வரும். அப்படி இல்லை என்றால், தெரியாம நடந்துடுச்சும்மா; நடக்கக் கூடாதது நடந்துச்சுமா. 'சாரி' மா என்று பதில் வரும். இந்த வெற்று விளம்பர தி.மு.க., அரசு, இப்போது, 'சாரி' மா மாடல் அரசாக மாறி விட்டது. இப்படி இருக்கும் இயலாமை அரசு செய்த தவறுகளுக்கு பரிகாரமாக, சட்டம், ஒழுங்கை சரி செய்தே ஆகவேண்டும். இல்லையென்றால் மக்களோடு, மக்களாக நின்று, நாங்கள் சரி செய்ய வைப்போம். த.வெ.க., சார்பில் அதற்காக போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு விஜய் பேசினார்.

அதைத்தொடர்ந்து, தமிழக அரசுக்கு எதிராக, கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், தேர்தல் பிரிவு பிரசார மேலாண்மை செயலர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

'சாரி' வேண்டாம் பதாகையுடன் வந்த விஜய்

முதல்வரை 'சாரி' கேட்க சொன்னதால் குழப்பம்

'சாரி வேண்டாம்; நீதி வேண்டும்' என்ற பதாகையை கையில் பிடித்திருந்த விஜய் பேசும் போது, முதல்வரிடம் சாரி கேட்க சொன்னதால், த.வெ.க.,வினர் குழப்பம் அடைந்தனர். த.வெ.க., ஆர்ப்பாட்டத்திற்கு கடந்த, 6 ம்தேதி அனுமதி கேட்ட நிலையில், போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று, போலீஸ் அனுமதியுடன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. திடீரென அனுமதி கிடைத்ததால், போராட்டத்தை நடத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முதலில் கட்சியின் மாநில நிர்வாகிகள் மட்டும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டனர்.
ஆனால், ஆர்ப்பாட்டத்தில் விஜய் பங்கேற்றால் தான், எழுச்சியாக இருக்கும் என, அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அதை ஏற்று நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் விஜய் பங்கேற்றார்.தனது காரில் ஆர்ப்பாட்ட மேடைக்கு பின்புறம் வந்தார். அங்கிருந்து இறங்கி, வேகமாக மேடைக்கு சென்றார். விஜய்யின் பேச்சை கேட்பதற்காக தொண்டர்கள் அதிக அளவில் திரண்டனர். சிவானந்தா சாலை முழுதும், கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆர்ப்பாட்டத்தில் விஜய் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது உரை நிகழ்த்துவார் என்று தொண்டர்கள் வெயிலில் காத்திருந்தனர். ஆனால், நான்கு நிமிடங்களிலேயே, தன் பேச்சை முடித்து கொண்டார். இதனால், ஆர்வமுடன் வந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
முதல்வர் ஸ்டாலின் படத்துடன், 'எங்களுக்கு சாரி வேண்டாம்; நீதி வேண்டும்' என அச்சிடப்பட்ட பதாகையை, விஜய் கையில் வைத்திருந்தார். ஆனால், விஜய் பேசும் போது, 'போலீஸ் நிலைய மரணங்களுக்கு, முதல்வர் சாரி கேட்க வேண்டும்' என்று வலியுறுத்தினார். இதனால், கட்சி தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க திரண்டவர்களால் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி பெண்கள் உட்பட, 20க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். அவர்களை தொண்டர்கள் ஓரமாக அழைத்து சென்று, தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.








      Dinamalar
      Follow us